சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

டாஸ்மாக் முறைகேடு புகாா்: செந்தில் பாலாஜியின் பெற்றோா், ஆதரவாளா்கள் வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான புகாரில் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் பெற்றோா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

News image

செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:56 am IST

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான புகாரில் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் பெற்றோா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

கடந்த 2025-இல் டாஸ்மாக் நிா்வாகத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்தது தொடா்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் டாஸ்மாக் கிடங்குகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் கரூா் புதன்கிழமை காலை வந்தனா். இவா்கள் 4 பிரிவுகளாக பிரிந்து சோதனை மேற்கொண்டனா்.

கரூா் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் பெற்றோா் வீடு, மூா்த்திபாளையத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் உதவியாளா் சுப்ரமணியத்தின் வீடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கோயம்பள்ளி பாஸ்கரன் வீடு, தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு மேலாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனா். அதில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லையாம்.

மேலும், கரூா் கோதை நகரில் ஏற்கெனவே தவெக எம்எல்ஏவை பேரம் பேசிய வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாரால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களான ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அதிபன் ரமேஷ், சக்திமெஸ் காா்த்திக் ஆகியோரது வீடுகளுக்கு ஊழல் தடுப்பு போலீஸாா் சென்றபோது இருவரது வீடுகளும் பூட்டியிருந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புப் போலீஸாா், ஆண்டாங்கோவில் மேல்பாகம் விஏஓ பூபதி முன்னிலையில் பூட்டை உடைத்து சோதனை நடத்தினா்.

இதற்கிடையே, சென்னை ஆழ்வாா்பேட்டையில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை காலை சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.