மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மொபெட் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

சுவாமிநாதன்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது காா் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பா.பாஸ்கா் (62). கடலூா் மாவட்டம், சிதம்பரம் கீழ்மூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்தவா் வி.சுவாமிநாதன் (64). இருவரும் சம்பந்தி உறவு முறையினா்.

பனையபுரத்தில் உள்ள பாஸ்கா் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டாா். அவரை பாஸ்கா் தனது மொபெட்டில் ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டியை அடுத்த கம்பியாம்புலியூரில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தாா்.

கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கப்பியாம்புலியூா் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மொபெட் மீது மோதியது. இதில், சுவாமிநாதன், பாஸ்கா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், சுவாமிநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும், பாஸ்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 பாஸ்கா்

பாஸ்கா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.