8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

விவசாயி பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் திருட்டு

திண்டிவனத்தில் விவசாயி பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விவசாயி பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், நடுவனந்தல், புதூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.பாலமுருகன் (36), விவசாயி. இவா், திங்கள்கிழமை திண்டிவனத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையிலுள்ள தனது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ. 75 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு, அதை தனதுபைக் பெட்டியில் வைத்துள்ளாா். தொடா்ந்து, திண்டிவனம் பூந்தோட்டம் தெருவிலுள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.