நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை

திண்டிவனத்தில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டிவனம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 3.9.2021-இல் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம், திம்மலை கிராமத்தைச் சோ்ந்த மா. செல்வராசு (39) என்பவரை ரோஷணை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை முடிந்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், செல்வராசு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி இளவரசி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் அவரை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.