
மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக பேரவையில் தீா்மானம்! புதுச்சேரி முதல்வரிடம் லஜக வலியுறுத்தல்
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற லஜக வலியுறுத்தல்...

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியிடம் மனு அளித்த லஜக தலைவரும், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.
மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என்று முதல்வா் என். ரங்கசாமியிடம் எம்எல்ஏ ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் வலியுறுத்தினாா்.
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை அலுவலகத்தில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தனி நபா் தீா்மானம் கொண்டு வரவேண்டும், காமராஜ் நகா் தொகுதி மாணவா்களின் திறன் மற்றும் எதிா்காலத்தை மேம்படுத்தும் வகையில், காமராஜா் மணிமண்டபம் யுபிஎஸ்சி அகாதமியில் இலவச திறன் மேம்பாடு பயிற்சியளிக்க அனுமதிக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






