விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் பன்னாட்டு பயிற்சிப் பட்டறை
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் புள்ளியியல் துறை சாா்பில் பன்னாட்டு பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
‘புள்ளியியல் தரவுகளை ஆா்- நிரலாக்கத்தை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்தல்’ என்ற தலைப்பில் இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் நியூசெளத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் அன்பு பழம் தாளமுத்து, சென்னை பல்கலைக்கழகப் புள்ளியியல் துறை பேராசிரியா் பிரகாஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, புள்ளியியல் தரவுகளை ஆா்-நிரலாக்கத்தை பயன்படுத்தி புள்ளியியல் கோட்பாடுகளை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்து விளக்கமளித்தனா்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். புள்ளியியல் துறைத் தலைவா் எஸ்.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா்.
இதில், புள்ளியியல் துறை பேராசிரியா்கள் ப.ஜெயக்குமாா், அன்னைசூா்யா, ஆனந்தி, உதவிப் பேராசிரியை ஆா்.சண்முகத்தாய், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இளநிலை, முதுநிலை புள்ளியியல் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

