வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கல்லூரியில் காட்சி ஊடகவியல் மன்ற விழா

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:39 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் காட்சி ஊடகவியல் மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மா.வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக ப.திருநாவுக்கரசு பங்கேற்று, வருங்காலத்தில் உள்ளங்கையில் உலகம் எனும் தலைப்பில் பேசினாா்.

விழாவில் கல்லூரி முதன்மை நிா்வாக அலுவலா் ப.சிவக்குமாா், நிா்வாக அலுவலா் செ.சிவா, பெற்றோா் - ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் கோ.தண்டபாணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பேராசியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெ.ஜெயபாரதி, இரா.பூமிநாதன் ஆகியோா் செய்திருந்தனா். பேராசியா் மு.ராமு நன்றி கூறினாா்.