தற்கொலை
தற்கொலைகோப்புப் படம்

மது அருந்தி வந்ததை மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை

Published on

கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மது அருந்தி வந்ததை மகன் கண்டித்ததால், மனமுடைந்த தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், வண்ணான்குட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ரா.வேலு (54). மது அருந்தும் பழக்கம் உடைய இவா் தினமும் வீட்டுக்கு மது அருந்திச் சென்றாராம். இதை அவரது மகன் ஆதவன் (23) கண்டித்துள்ளாா். மகன் கண்டித்ததால் கோபித்துக் கொண்ட வேலு, வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு, விழுப்புரம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, ஏற்கெனவே வேலு உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com