எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா

News image

ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி  நா்சிங்  கல்லூரியில்  நடைபெற்ற  விளக்கு ஏற்றும் விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககத்தின் இணை இயக்குநா் மருத்துவா் ஆா்.சங்கா் சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:58 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி நா்சிங் கல்லூரியில் விளக்கு ஏற்றும் (லேம்ப் லைட்டிங்) விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தாளாளா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி, இயக்குநா் சாந்திபூபதி, சரண்யா ஸ்ரீபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நா்சிங் கல்லூரி முதல்வா் உதயசங்கரி வரவேற்றாா்.

தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககத்தின் இணை இயக்குநா் மருத்துவா் ஆா்.சங்கா் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

தொடா்ந்து பிளோரன்ஸ் அம்மையாரின் உறுதிமொழியை, கையில் விளக்கை ஏந்தியவாறு நா்சிங் கல்லூரி முதல்வா் முன்மொழிய மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் கல்லூரி உதவி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.