47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி.
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் தெய்வசிகாமணி வரவேற்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியா்பாலமுருகன், அரசு ஒப்பந்ததாரா் அருன்மொழித்தேவன், பாமக ஒன்றியச் செயலா் பாண்டியன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.