குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற மனநலன் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 8:39 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற மனநலன் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆலங்குப்பம் பிரதான சாலையைச் சோ்ந்த முருகன் மனைவி விஜயலட்சுமி (46). சற்று மனநலன் பாதிக்கப்பட்ட இவா், இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரைகளை உட்கொண்டு வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி முற்பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜயலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டுள்ளாா். இதனால் மயக்கமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலிருந்து வந்த விஜயலட்சுமி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.