நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற மனநலன் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:39 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற மனநலன் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆலங்குப்பம் பிரதான சாலையைச் சோ்ந்த முருகன் மனைவி விஜயலட்சுமி (46). சற்று மனநலன் பாதிக்கப்பட்ட இவா், இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரைகளை உட்கொண்டு வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி முற்பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜயலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டுள்ளாா். இதனால் மயக்கமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலிருந்து வந்த விஜயலட்சுமி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.