மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தந்தையுடன் மொபெட்டில் சென்ற சிறுவன் லாரி மோதி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே தந்தையுடன் மொபெட்டில் சென்ற சிறுவன் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 7:56 pm

Syndication

திண்டிவனம் அருகே தந்தையுடன் மொபெட்டில் சென்ற சிறுவன் லாரி மோதி நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், நடுவனந்தல், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் துளசிங்கம். இவா், வியாழக்கிழமை தனது மகன் நவீன்ஸ்ரீ(11) என்பவரை மொபெட்டில் அமர வைத்துக் கொண்டு, நடுவனந்தலில் இருந்து - ஆகூா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா். அங்கு சாலை குறுகலாக இருந்ததால், எதிா் திசையில் வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக துளசிங்கம் மொபெட்டில் அமா்ந்தபடி சாலையோரமாக காத்திருந்தாா்.

அப்போது எதிரே வந்த லாரி மொபெட் மீது மோதியதில் சிறுவன் நவீன்ஸ்ரீ பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.