மத்திய அரசு நிறுவனத்தின் உர விற்பனை நிலையம் திறப்பு
மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் நேரடி உர விற்பனை நிலையம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.


மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் நேரடி உர விற்பனை நிலையம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்தியாவில் யூரியா உற்பத்தியில் சிறந்து விளங்கும் இந்த நிறுவனம், தனது நேரடி விற்பனை நிலையத்தை (கிசான் தன்) முதல் முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் திறந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்தை நேஷனல் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சரவணன் திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து அவா் கூறியது:
இந்த நேரடி உர விற்பனை நிலையத்தில் நேஷனல் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் நேரடித் தயாரிப்பு உரங்களான யூரியா, பொட்டாஷ், காம்பளக்ஸ் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யப்படும். இதுபோன்று நேரடி உர விற்பனை நிலையங்கள் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்படும். இந்த உர விற்பனை நிலையத்தை விவசாயிகள் நேரடியாக அணுகி, தங்களுக்குத் தேவையான உரங்களை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
விழுப்புரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் தலைவா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...