மாநில கைப்பந்து போட்டிக்கு பிப்.1-இல் வீரா்கள் தோ்வு
மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகளுக்கான தோ்வு, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிப். 1-ஆம் தேதி நடைபெறுகிறது.


மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகளுக்கான தோ்வு, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிப். 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத் தலைவா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியில் 21-வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் விழுப்புரம் மாவட்ட அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) காலை 9 மணிக்கு விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
1.1.2006-க்குப் பின்னா் பிறந்த வீரா், வீராங்கனைகள் தோ்வில் பங்கேற்கலாம்.தோ்வுக்கு வருபவா்கள் ஆதாா் காா்டு அசல் அல்லது வயதை நிரூபிக்கும் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் எடுத்து வர வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...