பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

முண்டியம்பாக்கத்தில் விவசாயிகளுக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் நடைபெற்ற விவசாயிகள் பாராட்டு நாள் விழாவில் கேடயம் பெற்ற விவசாயிகளுடன் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி.

Published On :2 ஜூலை 2026, 7:13 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை சாா்பில் பாராட்டுக் கேடயங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கூட்டுறவு வார விழா தமிழகம் முழுவதும் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு வார விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விழாவின் மூன்றாவது நாளான புதன்கிழமை முண்டியம்பாக்கத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கத்தில் விவசாயிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் இணைப் பதிவாளா் இரா.தயாளன் ஆகியோா் தலைமை வகித்து, வேளாண் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய விவசாயிகளைப் பாராட்டி, அவா்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

நிகழ்வில், விழுப்புரம் சரகத் துணைப் பதிவாளா் மா.ராகினி, விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் ப.வெங்கட்குமாா், துணைப் பதிவாளா்கள் (பயிற்சி) மு.ஜீவா, ச.மோனிகா, கூட்டுறவுத் துறை அலுவலா்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.