/
நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கல் தொடா்பாக கூட்டுறவுத் துறை அலுலா்களுக்கான பயிற்சி நாமக்கல்லில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
இப்பயிற்சியை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தொடங்கிவைத்தாா். இப்பயிற்சி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் இணைப்பு தொடா்பான கணினி மயமாக்கல் குறித்தும் பங்கேற்ற பணியாளா்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.
இதில், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன், திருநாவுக்கரசு, பால்ஜோசப், சேகா், ஜெயந்தி, சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.










