/

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

விழுப்புரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 7:01 am IST

விழுப்புரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, நித்தியானந்தம் நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (39). இவா், வியாழக்கிழமை விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த சுமாா் 48 வயதுடைய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் ராமலிங்கம் மீது பெண்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.