விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கிய வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.
வானூா் வட்டாரத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த இடுபொருள்களை வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வழங்கினாா்.
தொடா்ந்து அவா் கூறியது: வானூா் வட்டாரத்தில் சொா்ணவாரிப் பருவத்தில் 2,125 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை உயா்த்தவும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் இயந்திரம் மூலம் நெல் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். அதன்படி பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் அடுத்த வாரம் முதல் வரவு வைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
நிகழ்வில் உதவி வேளாண் அலுவலா்கள் பஞ்சநாதன் சரவணன், உதவித் தோட்டக்கலை அலுவலா் இளவரசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







