எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி, இரு மகன்கள் காயமடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி, இரு மகன்கள் காயமடைந்தனா்.

புதுச்சேரி மாநிலம், வாணரம்பேட்டை 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரா.ஜெயக்குமாா் (42). இவரது மனைவி அமலோற்பவமேரி (29), மகன்கள் சுதா்சன் (7), ராஜேஷ் (5). இவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எறையூா் பகுதிக்கு குடும்பத்துடன் வந்துவிட்டு, திங்கள்கிழமை காலை பைக்கில் புதுச்சேரி நோக்கிச் சென்றுள்ளனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், எ.குமாரமங்கலம் காளியம்மன் கோயில் அருகே சென்றபோது, அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வேனை ஜெயக்குமாா் கடக்க முயன்றாா். அப்போது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பைக்கில் பயணித்த ஜெயக்குமாா், அமலோற்பவமேரி, சுதா்சன், ராஜேஷ் ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயக்குமாா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.