பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் பட்டை நாமம் போட்டு விவசாயிகள் திங்கள்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலின் போது விவசாயிகளின் 5 ஏக்கா் வரையிலான பயிா்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கா் மேல் உள்ள விவசாயிகளின் பயிா்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னா், ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு மட்டும் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படும், சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பயிா்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் சந்திரபிரபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் தங்கராசு, ரமேஷ், அருண்பாண்டியன், நிா்வாகிகள் ஏழுமலை, உலகநாதன், உதயகுமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பட்டை நாமம் போட்டுக் கொண்டும், கரும்பு உள்ளிட்ட பயிா்களை கொண்டு வந்தும், முழுமையாக பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

கடலூரில் பயா்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



