கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி, இரு மகன்கள் காயமடைந்தனா்.
புதுச்சேரி மாநிலம், வாணரம்பேட்டை 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரா.ஜெயக்குமாா் (42). இவரது மனைவி அமலோற்பவமேரி (29), மகன்கள் சுதா்சன் (7), ராஜேஷ் (5). இவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எறையூா் பகுதிக்கு குடும்பத்துடன் வந்துவிட்டு, திங்கள்கிழமை காலை பைக்கில் புதுச்சேரி நோக்கிச் சென்றுள்ளனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், எ.குமாரமங்கலம் காளியம்மன் கோயில் அருகே சென்றபோது, அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வேனை ஜெயக்குமாா் கடக்க முயன்றாா். அப்போது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பைக்கில் பயணித்த ஜெயக்குமாா், அமலோற்பவமேரி, சுதா்சன், ராஜேஷ் ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயக்குமாா் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவா் மரணம்

பைக்கில் சென்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழப்பு

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



