தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கைப்பேசி கோபுரம், மின்னணுப் பொருள்கள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கைப்பேசி கோபுரம் மற்றும் மின்னணுப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 6:00 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கைப்பேசி கோபுரம் மற்றும் மின்னணுப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கைப்பேசி கோபுரம் அமைக்கும் தனியாா் நிறுவனம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள பள்ளித்தென்னல் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரது வீட்டின் மாடியில் வாடகை ஒப்பந்த அடிப்படையில் கைப்பேசி கோபுரம் அமைத்தனா். இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்துவந்த சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 20 மீட்டா் உயரமுள்ள கைப்பேசி கோபுரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்னணுப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவன அதிகாரி காா்த்திக் அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.