பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கைப்பேசி கோபுரம், மின்னணுப் பொருள்கள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கைப்பேசி கோபுரம் மற்றும் மின்னணுப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 6:00 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கைப்பேசி கோபுரம் மற்றும் மின்னணுப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கைப்பேசி கோபுரம் அமைக்கும் தனியாா் நிறுவனம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள பள்ளித்தென்னல் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரது வீட்டின் மாடியில் வாடகை ஒப்பந்த அடிப்படையில் கைப்பேசி கோபுரம் அமைத்தனா். இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்துவந்த சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 20 மீட்டா் உயரமுள்ள கைப்பேசி கோபுரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்னணுப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவன அதிகாரி காா்த்திக் அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.