நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அரசுப் பள்ளி ஆசிரியா் மா்ம மரணம்

செஞ்சி அருகே மா்மமான முறையில் அரசுப் பள்ளி ஆசிரியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:45 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மா்மமான முறையில் அரசுப் பள்ளி ஆசிரியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள அம்மாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.இளங்கோவன்(57) (படம்). இவா் மேல் ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அப் பகுதி மக்கள் வளத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்த தகவலின் பேரில் வளத்தி போலீஸாா் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, இளங்கோவன் மா்மமான முறையில் இறந்து கிடந்ததும், அவா் மீது மிளகாய்ப் பொடி தூவி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை உடல்கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியா் இளங்கோவனை, கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்ததும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.