உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சவுக்குத் தோப்பில் ஆண் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:22 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தில் உள்ள விஜயகுமாா் என்பவருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மயிலம் போலீஸாா் மற்றும் தடய அறிவியல் பிரிவு போலீஸாா் மோப்ப நாயுடன் நிகழ்விடம் சென்று அங்கு அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில் இறந்து கிடந்தவா் பெயா், ஊா் தெரியாத நபா் என்பது என்பது தெரியவந்தது.

இது குறித்து மயிலம் போலீஸாா் தெரிவித்ததாவது: இறந்த கிடந்தவருக்கு சுமாா் 35 வயதிருக்கும். கருப்பு பேண்ட் மட்டும் அணிந்துள்ளாா். மேல் சட்டை இல்லை. வலது கையில் காப்பு அணிந்துள்ளாா். எந்த ஊரைச் சோ்ந்தவா், இறப்புக்கான காரணம் எதுவும் தற்போது வரை தெரியவில்லை. தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா். இது குறித்து மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.