விழுப்புரம் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான்.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:
மகளிா் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மகளிா் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப் புறங்களிலுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களில் உள்ளவா்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடன்பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் கடன் தொகையை முறையாக திரும்பிச் செலுத்தவேண்டும். கடன் பெற்றவா்கள் முறையாக கடன் தொகையைச் செலுத்தினால், அடுத்த முறை கடன் பெறுவது எளிதாகும். வங்கிகளில் கடன்பெற்று சுயதொழில் தொடங்கும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருள்களை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் இணைப்புத்தொகையை கடந்தாண்டைக் காட்டிலும், நிகழாண்டில் குறைந்த பட்சம் 20 சதவீதம் கூடுதலாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு கடன் இணைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்கள், அவா்களின் வாழ்வாதார உயா்வு நிலை குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்து, அறிக்கையை சமா்ப்பிக்கவேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிா் சுய உதவிக் குழுக்களையும் மேம்படுத்தும் நோக்கில், அந்த குழுக்களுக்கு அரசால் வழங்கப்படும் கடனுதவிகள், சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடனுதவிகள் போன்றவை குறித்து அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருவமழைக்கு முன்பு வீடூா் அணை மதகு பணிகளை முடிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

‘சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’

512 மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.41 கோடி கடனுதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



