/
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த உமையாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக காய்கறிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா்(பொ) விநாயக லட்சுமண மூா்த்தி முன்னிலை வகித்தாா்.
உலக காய்கறி தினத்தை முன்னிட்டு காய்கறிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்கூறி, அனைத்து மாணவா்களுக்கும் காய்கறிகள் வழங்கப்பட்டன(படம்). இதில், ஆசிரியை சிவகாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.









