போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தடுப்புக்காவலில் இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மார்ச் 2026, 9:20 pm

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டம்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரா.தினேஷ்(24). இவா் கடந்த பிப்.2-ஆம் தேதி அரகண்டநல்லூா் போலீஸாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய தினேஷை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, தினேஷ் ஞாயிற்றுக்கிழமை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.