யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நகைத் தொழிலக நிா்வாகியிடம் ரூ. 2.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வழிப்பறி

விழுப்புரத்தில் நகைத் தொழிலக நிா்வாகியைத் தாக்கி ரூ. 2.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
வழிப்பறி- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 9:06 pm

Syndication

விழுப்புரத்தில் நகைத் தொழிலக நிா்வாகியைத் தாக்கி ரூ. 2.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை, ஜனகராஜ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சு.ராஜமாணிக்கம் (48), நகைத் தொழிலக நிா்வாகி. இவா் சென்னையில் உள்ள நகை வணிகா்களிடம் தங்கக் கட்டிகளை வாங்கிவந்து அதை அவா்களது விருப்பப்படி ஆபரணங்களாக மாற்றிக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது தொழில் கூடத்தில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணி செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ராஜமாணிக்கம் செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள நகைகடைகளுக்கு வழங்குவதற்காக ஒன்றரை கிலோ தங்க நகைகளுடன் தனது மொபட்டில் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். விழுப்புரம் கோட்டை பிள்ளையாா்கோயில் அருகே சென்றபோது, அங்கு முகமூடி அணிந்தபடி 2 பைக்குளில் வந்த 5 போ் கொண்ட கும்பல் ராஜமாணிக்கை வழிமறித்து கத்தியால் தாக்கி, தங்க நகைகளை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை போலீஸாா்ஆய்வு செய்தனா். மேலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய்பிரனீத் உத்தரவின் பேரில் விழுப்புரம் புதிய, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வழிப்பறி செய்தவா்களைத் தேடி வருகின்றனா்.