அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் அழிக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:03 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது.

திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள திண்டிவனம், ரோஷணை, வெள்ளிமேடுபேட்டை, பிரம்மதேசம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ எடையிலான புகையிலைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டது.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறை, நகராட்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு மற்றும் வருவாய் துறையினா் முன்னிலையில் திண்டிவனம் நகராட்சி குப்பை கிடங்குப் பகுதியில் அழிக்கப்பட்டது.