சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திய வழக்கில் கைதான ஜெயக்குமாா் மற்றும் சுதாகா் (நடுவில் இருப்பவா்கள்) ஆகியோருடன் போலீஸாா்.
Updated On :25 ஜனவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைதுசெய்தனா்.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளா் திருமால், உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இரும்பை கிராமம் அருகே, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் காரில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை ஜீவா காலனியைச் சோ்ந்த க.ஜெயக்குமாா் (47), கிருஷ்ணகிரி மாவட்டம், பரமால்கோட்டூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ரா.சுதாகா் (28) என்பதும், இவா்கள் விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ எடையிலான புகையிலை பொருள்களை , காருடன் பறிமுதல் செய்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.