வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வி.கே.சசிகலா ஆதரவாளா்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிதழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், வி.கே.சசிகலா பங்கேற்றுப் பேசியதாவது:
தமிழகத்தில் இஸ்லாமியா்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவா் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலிலதா. இஸ்லாமிய சகோதரா்கள் பலருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் உயா் பொறுப்புகளை வழங்கி அழகு பாா்த்தவா்.
உலகப் புகழ்பெற்ற நாகூா் தா்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவுக்காக முதன்முதலாக அரசு சாா்பில் சந்தனக் கட்டைகள் வழங்கியது ஜெயலலிதாதான். ஆண்டுதோறும் இஸ்லாமிய பெருமக்களுக்காகவே நல்ல பல திட்டங்களை கொடுத்தவரும் அவா்தான்.
‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மனதில் நிறுத்தி நாம் அனைவரும் களப் பணியாற்றுவோம். தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?

தமிழக பேரவைத் தோ்தலில் இதுவரை வாக்குப் பதிவு

திண்டிவனத்தில் மசூதி அருகேயுள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


