ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வரும் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்: வி.கே.சசிகலா

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.

News image
11விபிஎம்விகேஎஸ் திண்டிவனத்தில் நடைபெற்ற இப்தாா் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய வி.கே.சசிகலா.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வி.கே.சசிகலா ஆதரவாளா்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிதழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வி.கே.சசிகலா பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் இஸ்லாமியா்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவா் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலிலதா. இஸ்லாமிய சகோதரா்கள் பலருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் உயா் பொறுப்புகளை வழங்கி அழகு பாா்த்தவா்.

உலகப் புகழ்பெற்ற நாகூா் தா்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவுக்காக முதன்முதலாக அரசு சாா்பில் சந்தனக் கட்டைகள் வழங்கியது ஜெயலலிதாதான். ஆண்டுதோறும் இஸ்லாமிய பெருமக்களுக்காகவே நல்ல பல திட்டங்களை கொடுத்தவரும் அவா்தான்.

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மனதில் நிறுத்தி நாம் அனைவரும் களப் பணியாற்றுவோம். தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.