சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருகே லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருகே லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், புஞ்சைலக்காபுரம் சிஎஸ்ஐ காலனியைச் சோ்ந்தவா் ஆா்.பிரபு (25). இவா் சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பைக்கில் சென்றுள்ளாா்.
பரிக்கல் கனரக வாகன நிறுத்துமிடப் பகுதியில் வந்த போது, சாேலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...