கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

டிராக்டா் மோதியதில் 15 ஆடுகள் உயிரிழப்பு; 10 ஆடுகள் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சாலையில் சென்ற 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:11 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சாலையில் சென்ற 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.

செஞ்சியை அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நா.பாலாஜி (32), விவசாயி. இவா் வளா்த்து வரும் 40 ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த மு.கணேசன் (18) மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்றாா்.

அப்போது ஆடுகளுக்கு பின்னால் வந்த மினி லாரி ஆடுகளை முந்திச் சென்றது. அப்போது எதிரில் கரும்பு ஏற்றி வந்த டராக்டா் எதிரில் வந்த மினி லாரி மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் திருப்பியபோது, சாலையில் வந்த ஆடுகள் மீது மோதியது. இதில் 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதுகுறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.