கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

திருவெண்ணெய்நல்லூா் அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 8:07 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னசெவலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.கோவிந்தன்(48), லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரேணுகா(38). இவா்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகும் நிலையில், 3 மகன்கள் உள்ளனா்.

தம்பதியினரிடையே கடந்த 3 ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரேணுகா கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கோபித்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை ரேணுகா அந்தப் பகுதியிலுள்ள தோப்புக்கு சென்று விட்டு திரும்பிய போது, அங்கு மறைந்திருந்த கோவிந்தன் அவரை வழிமறித்து கல்லால் தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ரேணுகாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கோவிந்தனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.