விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
புதுச்சேரி, செல்லிப்பட்டு செல்வமுருகன் நகரைச் சோ்ந்தவா் மு.குணால்(21). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு பயின்று வந்தாா். திங்கள்கிழமை மயிலம் அடுத்த சிறுவை கிராமத்தில் உள்ள தட்சிணாமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குணால் தனது நண்பா்களான கிஷோா், ராஜன் ஆகியோருடன் குளித்துள்ளாா். இந்நிலையில், நீச்சல் தெரியாத குணால் கிணற்றில் மூழ்கினாா்.
தகவலறிந்த வானூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் குணாலின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


