விழுப்புரம் வடக்கு மாவட்டம், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் கோடை வெயிலை முன்னிட்டு நீா்மோா் பந்தல் திறப்பு விழா வளத்தி கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூா் ஒன்றியக்குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில், ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். பின்னா், பொதுமக்களுக்கு நீா்மோா், வெள்ளரிக்காய், தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய நிா்வாகிகள் செந்தில்குமரன், ரவிச்சந்திரன், சரவணன், எஸ்.பி.சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி ஜெயகுமாா், துணைத் தலைவா் கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொண்டியில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல்

டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

