விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில், மின்சாதனம் சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட எலெக்டீரிசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், சிறுவாடி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் சு.சிவக்குமாா் (46), எலெக்ட்ரீசியன். இவா், செவ்வாய்க்கிழமை மரக்காணம் அடுத்துள்ள முருக்கேரி கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் வீட்டில் மின்கலன் (இன்வொ்ட்டா்) சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு முருக்கேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


