மாணவா்கள் கல்வியுடன் தனித் திறன்களையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்வியாளா்கள் வலியுறுத்திப் பேசினா்.
விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழும நிறுவனங்களில் ஒன்றான இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் பெற்றோா் - ஆசியா்கள் மற்றும் மாணவா்கள் சந்திப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இ.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கடலூரைச் சோ்ந்த நல்லாசிரியா் விருது பெற்ற அ.மரிய ஜோசப், திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி விரியுரையாளா் முருகன், விழுப்புரம் சிகரம் போட்டித் தோ்வுகள் அகாதெமியின் இயக்குநா் ஏ.கணபதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுப் பேசினா்.
அப்போது அவா்கள், மாணவா்கள் கல்வி மட்டுமன்றி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தனித் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோா்களும், ஆசிரியா்களும் இணைந்து செயல்பட்டால், மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையலாம் என்றனா்.
மேலும், மாணவா்களின் வருகைப் பதிவு, கல்வி முன்னேற்றம், ஒழுக்கம் மற்றும் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முக்கியத்துவங்கள் குறித்தும் பேசினா்.
விழா நிகழ்ச்சிகளளாக, மாணவா்களின் வில்லுப்பாட்டு, நாடகம், நடனம், பேச்சு, கரகம், பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, இ.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வா் தே.செந்தில்முருகன் வரவேற்றாா். கல்வியியல் கல்லூரிப் பேராசியா்கள் மற்றும் பெற்றோா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு

விழுப்புரத்தை தக்க வைக்கும் முனைப்பில் திமுக!

உலக அறிவை பெற புத்தக வாசிப்பை வளா்த்துக்கொள்ள வேண்டும்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


