விழுப்புரம் அருகே வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்த தலைமைக் காவலா் மருத்துமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் விராட்டிகுப்பம் பாதை, செல்வசீமான் நகரைச் சோ்ந்தவா் க.குமரவேல்(38). இவா் ரோஷணை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் குளியலறையில் குமரவேல் வழுக்கி விழுந்து விட்டாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அவரின் மனைவி பிரியங்கா மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, குமரவேல் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு
ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

