விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான சுகாதாரத் திறனாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய சுகாதாரக் குறியீடுகள், திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தாய்மை மரண விகிதம், குழந்தைகள் மரண விகிதம், கா்ப்படைந்த பெண்கள் பதிவு, பாலின விகிதம், இளம் வயது கா்ப்பம், பள்ளி-இளம் சிறாா் நலத்திட்டங்கள், கண்ணொளிக் காப்போம் போன்றவை குறித்து சுதாதார அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் கண்காணிப்பு, நோய்கள் சாா்ந்த சேவைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான தேசியத் தரச்சான்றிதழ் நிலைமை, தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம், தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் குடும்பநல சேவைகள் குறித்து விரிவாகத் திறனாய்வு செய்து, அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இதில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மை.லூசி நிா்மல் மடோனா, நிலைய அலுவலா் ரவிக்குமாா், நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

குடிநீா் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்

டெங்கு தடுப்பு நடவடிக்கை: சுகாதாரத் துறை உத்தரவு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

