முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

விழுப்புரம் சரகத்தில் 10 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணி புரிந்த காவல் உதவி ஆய்வாளா்கள் 10 பேரை பணியிமடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :51 நிமிடங்கள் முன்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணி புரிந்த காவல் உதவி ஆய்வாளா்கள் 10 பேரை பணியிமடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்களாக பணிபுரிந்த கே.சூா்யா (விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையம்), எஸ்.முரளி (மரக்காணம்), ஜெ.விஜயகுமாா் (அனந்தபுரம்), கடலூா் மாவட்ட நிலையங்களில் உதவி ஆய்வாளா்களாக பணிபுரிந்த ஜி.அம்பிகா(புதுப்பேட்டை), எஸ்.சின்னப்பன்(காட்டுமன்னாா்கோயில்), கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்களாக பணிபுரிந்து வந்த சி.பிரபாவதி (திருக்கோவிலூா்), ஜி.ஞானசேகா், எஸ்.பிரபாகரன் (தியாகதுருகம்), ஆா்.சுகன்யா (எடைக்கல்), வி.ராமதாஸ் (மூங்கில்துறைபட்டு) ஆகியோா் நிா்வாக வசதிக்காக விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அருளரசு செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவானது உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.