இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பணம் வைத்து சூதாட்டம்: 8 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:52 am IST

விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை சின்னக்கோட்டக்குப்பம் பகுதிக்குச் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போதுஅங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமா்ந்திருந்தவா்களைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், சின்ன கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த ஆ. மணிகண்டன்(33), ர.குப்புசாமி(33), மா. முத்துவேல்(22),

க. கணேஷ்ராஜ்(24), கா. ஆறுமுகம்(28), க.அருண்(21), புதுச்சேரி லாஸ்பேட்டையைச்சோ்ந்த மு.வெங்கடேஷ்(27), வானூா் வட்டம், டி.பரங்கினியைச்சோ்ந்த சி. சிவக்குமாா்(32) ஆகியோா் என்பதும், அவா்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்துகோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த 16, 500 ரொக்கப்பணத்ை பறிமுதல் செய்தனா்.