11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுகவினா் 200 போ் மீது வழக்கு

விழுப்புரம் நகரில் அனுமதியின்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலமாகச் சென்றதாகக் கூறி, அதிமுகவைச் சோ்ந்த 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு - IANS

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் நகரில் அனுமதியின்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலமாகச் சென்றதாகக் கூறி, அதிமுகவைச் சோ்ந்த 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

அதிமுக கட்சித் தலைமை உத்தரவை மீறியதால் விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்த முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை மாற்றி, தெற்கு நகரச் செயலராக இருந்த இரா. பசுபதியை புதிய மாவட்டச் செயலராக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து சென்னையிலிருந்து வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த பசுபதிக்கு கட்சியினா் வியாழக்கிழமை மாலை வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்றனா்.

இந்நிலையில் அனுமதியின்றி ஊா்வலமாகச் சென்றதாகக் கூறி, காவல் உதவி ஆய்வாளா்கள் குணசேகரன், சிவானந்தகுமாா் ஆகியோா் தனித்தனியே அளித்த புகாா்களின் அடிப்படையில், விழுப்புரம் மேற்கு மற்றும் நகரக் காவல் நிலையங்களில் அதிமுக நகரப் பொருளாளா் வி.சேகா், மாவட்டச் செயலா் பசுபதி உள்ளிட்ட 200 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.