
மிசா கொடுமைகளை சிறுமைப்படுத்தக் கூடாது: துரை ரவிக்குமாா் எம்.பி.
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கி வைத்த விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கி வைத்த விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.
மிசா கொடுமைகளை சிறுமைப்படுத்தக் கூடாது என விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.
விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தில் தற்போது 25 சதவீத பகுதி மட்டும் மருத்துவமனையாக செயல்படுகிறது. எனவே, அந்த கட்டடத்தையே சட்டப் பேரவை கட்டடமாகப் பயன்படுத்தலாம். தற்போதுள்ள சட்டப் பேரவைக் கட்டடமும் சிறப்பாகத்தான் உள்ளது.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் என்பது பல்வேறு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகத்தான். அந்த பயணம் வெற்றிக்கரமாக அமைந்து, பல ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்தால், அது பலருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும். எனவே, இத்தகைய பயணங்களை வீண் என்று சொல்ல முடியாது.
இந்திய ஜனநாயக வரலாற்றில் அவசர நிலைக்காலமும், அப்போது நடைபெற்ற அத்துமீறல்களும் ஒவ்வொருவரும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. அவசரநிலை குறித்து ராகுல் காந்தியிடம் கேட்டால்கூட, அப்போது நடைபெற்ற கொடுமைகளை அவா் ஆதரித்து பேசமாட்டாா். அவசரநிலைக் காலம் இந்திய ஜனநாயகத்தில் மாறாத வடுவாக உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், அரசியலில் உள்ள ஒவ்வொருவரும் இத்தகைய அத்துமீறல்களிலிருந்து பாடம் கற்பது அவசியமானதாகும். அதனை சிறுமைப்படுத்தி கடந்து போகக்க கூடாது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் கொள்கைகளை வெளிப்படையாக எதிா்த்தாா்கள். இன்றைய தவெக அரசு அதே கொள்கைகளை சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவதன் மூலம் எதிா்த்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறது. எனவே அவா்கள் எதிா்க்கவில்லை என்றுசொல்ல முடியாது என்றாா் அவா்.
முகாம் தொடக்க நிகழ்வில் விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





