வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது:மோடி பேச்சு

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் .

News image
பிரதமர் மோடி- பிடிஐ
Updated On :11 மே 2024, 7:48 am

DIN

மக்களவைத் தேர்தலில் 50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்றும், தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஒடிசாவில் கந்தமல் மக்களவைத் தொகுதி புல்பானியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமை மோடி பேசினார். ஒடிசாவில் "இரட்டை என்ஜின்" ஆட்சி முறை அமைக்கப்படும், ஒடியா மொழி மற்றும் கலாசாரத்தை புரிந்து கொள்ளும் மண்ணின் மகன் அல்லது மகள் பாரதிய ஜனதா கட்சி அரசின் முதல்வர் ஆக்கப்படுவார் என்றார்.

மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் இருந்த மத்திய பாஜக அரசின் சாதனைகளை நினைவுகூர்ந்த அவர், 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், பொக்ரான் அணுகுண்டு சோதனைகள் செய்து உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தினார் என்றும் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு தனது ஆட்சியில் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.