கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

திருப்பதி சென்று வந்ததும் கூட்டணி அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் விஜயகாந்த்: கட்சி வட்டார தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்லவிருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்லவிருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் முடித்து சென்னை திரும்பியதும், கூட்டணி அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அனேகமாக, வரும், 8ம் தேதி நிறைந்த அமாவாசை நாள் என்பதால், அன்றைய தினம் கூட்டணியை உறுதியாக அறிவிப்பார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுகவை வீழ்த்த தே.மு.தி.க அவசியம் என்பதை உணர்ந்து அக்கட்சியிடன் கூட்டணி அமைக்க, திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனர்.

தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறேன் என்று இந்த நிமிடம் வரைக்கும் விஜயகாந்த் அறிவிக்கவில்லை. அவரது மவுனம் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவற்றை விஜயகாந்த் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.