டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: அன்புமணி

தேமுதிகவுடன் திமுக ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் நடத்தியதாக வைகோ கூறியுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப் போவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:52 pm

அரவிந்தன்

தேமுதிகவுடன் திமுக ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் நடத்தியதாக வைகோ கூறியுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப் போவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 இந்த விவாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 பாமகவின் இளைஞர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தியாகராய நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் அன்புமணி பேசியது:  கூட்டணிக்காக திமுக எல்லோரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. கூட்டணிக்கு யாரும் வராததால் பல்வேறு அமைப்பு ஆதரவு தெரிவிப்பதாகக் காட்டுகிறது. இதில் ஒன்றிரண்டு அமைப்புகளைத் தவிர, மற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கிறதா என்றே தெரியவில்லை.

 இங்கு யாரும் ஆதரவு தெரிவிக்காததாதல் ஜார்க்கண்ட், பீகாரில் இருந்து எல்லாம்  ஆள்களை  திமுக அழைத்து வரும் என்று நினைக்கிறேன். இப்போது காங்கிரஸ் கூட, திமுகவுடன் ஏன் கூட்டணி அமைத்தோம் என்று நினைக்கிறது. அதிமுகவின் நிலை இதைவிட மோசம். சில மாதங்களுக்கு முன்பு கண்ணுக்கு எட்டி தூரம் வரை எதிரிகளே இல்லை என்றது.

 தற்போது கூட்டணிக்கு எல்லோரிடம் பேசிக் கொண்டிருக்கிறது.  அடுத்ததாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி. பெயரிலேயே குழப்பம். முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது நன்றாக போய்விட்டது. பாமகவின் வெற்றி எளிதாகிவிட்டது என்றார்.  பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியால் பாமகவின் வெற்றி வாய்ப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. பாமகவின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.  கூட்டணி அமைப்பதற்காக ரூ.500 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக ஒரு கட்சியின் தலைவரே (வைகோ) கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம். தேர்தல் ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.