கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

யாருக்கு வாக்களிப்பது? அதிகாரியிடமே கேட்ட வாக்காளர்

யாருக்கு நான் வாக்களிப்பது என்று கொளத்தூரில் வாக்குச்சாவடி அதிகாரியிடமே, ஒரு வாக்காளர் கேட்டதால், அந்த அதிகாரி தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:17 pm

அரவிந்தன்

சென்னை: யாருக்கு நான் வாக்களிப்பது என்று கொளத்தூரில் வாக்குச்சாவடி அதிகாரியிடமே, ஒரு வாக்காளர் கேட்டதால், அந்த அதிகாரி தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

 கொளத்தூர் தொகுதி திருவீதியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணி முதலே பரபரப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்தனர். அந்தப் பள்ளியில் 45-ஆவது பாகத்துக்குரிய வாக்குப் பதிவு மையத்தில் ஓர் இளைஞர் வாக்களிக்க வந்தார். ஆட்டிஸம் பாதிப்பு உள்ளவராக இருந்தார். அவருடன் உதவியாளர் யாரும் வரவில்லை. பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் கொண்டு வந்தார். அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, விரலில் மை வைத்து அவரை வாக்களிக்க அனுமதித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு முன் சென்றவர், அங்கிருந்து எதை அழுத்ததுவது என்றார்.

அதற்கு, பெண் அதிகாரி நீல நிற பட்டன் இருக்கும் அதை அழுத்துமாறு கூறினார்.

ஆனால், அந்த இளைஞர் மீண்டும், யாருக்கு அழுத்துவது என்று கேட்டார். இந்தக் கேள்வியால் அந்த மையத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். திமுக, அதிமுக, பாமக தேர்தல் முகவர்கள் அதிகாரியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிறகு, அந்தப் பெண் அதிகாரி ஒருவாறு சமாளித்து, ஏதாவது ஒரு நீலப் பட்டனை அழுத்துமாறு கூற, அந்த இளைஞரும் ஏதோவொரு பட்டனில் அழுத்த, பீப் சத்தமும் கேட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.