போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் புதன்கிழமை இரவு தேர்வுக் கட்டுப்பாட்டு அறையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போச்சம்பள்ளி போலீஸார் தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் பத்துக்கும் மேற்பட்ட அறைகளின் பூட்டுகளை உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.
இதில் பள்ளியின் முக்கிய அறையான தேர்வுக்கட்டுப்பாட்டு அறையின் பூட்டை உடைத்து அறையில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்துள்ளனர். பிறகு அந்த அறையில் இருந்த ரேடியோவின் மைக்கில் இருந்த பேட்டரியை எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் ஆசிரியரின் அறையின் பூட்டை உடைத்து மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2,500 எடுத்துக்கொண்டு மின்விளக்குகளை உடைத்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு பள்ளிகளிலும் இரவு நேரக் காவலர்கள் இல்லாததால்தான் இந்த திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய்!

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்
தமிழ்நாட்டின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
